ஊழியர்களான உங்களுக்கு சிரம வாசனா நிதியத்திலிருந்து கிடைக்கும் பயன்களும் சேவைகளும் யாவை?
பின்னிணைப்பு 01
- மருத்துவ சிகிச்சை நிலையம் / கண் சிகிச்சை சேவை
- ஊழியர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
- ஊழியர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
பின்னிணைப்பு 02
- தொழில் மற்றும் மூன்றாம் நிலை பயிற்சி நெறிகளில் ஈடுபடுத்துதல்
- தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
பின்னிணைப்பு 03
- மருத்துவ உதவிகளை வழங்குதல் (தொழில் சார்ந்த நோய்களுக்காக)
- திடீர் அனர்த்த நிவாரணங்களை வழங்குதல்
- தொழில் ரீதியாக சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
பின்னிணைப்பு 04
- சட்ட உதவி சேவை
பின்னிணைப்பு 05
- மரணத்தை ஏற்படுத்தும் விபத்துக்களின்போது நிதியுதவி மற்றும் கல்வி கற்கின்ற தங்கி வாழ்வோருக்கு புலமைப் பரிசுகளும் பாடசாலை உபகரணங்களும்.
- முழுமையாக ஊனமடைந்த அனர்த்தங்களின்போது நிதியுதவி / ஊனமுற்ற நிலைக்கு பொருத்தமான உபகரணங்களுக்கு புலமைப்பரிசுகளும் பாடசாலை உபகரணங்களும்
- இயற்கை அனர்த்தஙகளின்போது நிவாரணங்களும் நிதியுதவியும்.
பின்னிணைப்பு 06
- உழைப்புக்கு பெருமைமிகு அதிசிறந்த சேவையை பாராட்டல்
- உழைப்புக்கு பெருமைமிகு மருத்துவ உதவிகளை வழங்குதல்
சட்ட உதவி சேவை
ஊழியர்களான நீங்கள் சிரம வாசனா நிதியத்திலிருந்து சட்ட உதவிகளைப் பெறுவது எப்படி?
உங்கள் சேவை நிலையத்திலிருந்து தான்தோன்றித்தனமாக உங்களை சேவையிலிருந்து நீக்கும் பட்சத்தில் அல்லது சேவை நிலையம் உங்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரமபித்துள்ள போது உங்களுக்கு சிரம வாசனா நிதியதிலிருந்து சட்ட உதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
சட்ட உதவி சேவையால் ஊழியர்களான உங்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை?
- உங்களுடைய பிணக்கு பற்றிய முறைப்பாட்டை கோவைப்படுத்துவதற்கு சட்டத்தரணியொருவரின் அல்லது சட்ட முகவர் ஒருவரின் உதவிக்காக தொடர்புபடுத்தல்
- நீங்கள் சட்டத்தரணிக்கு / சட்ட முகவருக்கு செலுத்துகின்ற கட்டணங்களைக் கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு 10,000/= ரூபாவை விஞ்சாத நிதி நிவாரணம்.
சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள உங்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகைமைகள் யாவை?
- நீங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டபோது பெற்ற அடிப்படைச் சம்பளம் 10,000/= ரூபாவுக்கு குறைவாக அல்லது அனைத்து கொடுப்பனவுகளுடன் சம்பளம் 15,000/= ரூபாவுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
- உங்கள் முறைப்பாட்டை பின்வரும் நிறுவனங்களில் ஒன்றில் முன்வைக்க வேண்டும்.
- தொழில் நியாய சபை
- தொழில் நீதி மன்றம்
- தொழில் நட்ட ஈட்டு ஆணையாளர் அல்லது
- தொழில் திணைக்களத்தில் சேவையை முடிவுறுத்தும் பிரிவில்
- உங்களுக்காக சட்டத்தரணியொருவர் / சட்ட முகவர் ஒருவர் ஆஜராக வேண்டும்.
சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விண்ணப்பபடிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
- உங்களுடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவது சம்பந்தமான பத்திரங்கள் (தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி உத்தரவுப்பத்திரம் என்பவற்றின் தெளிவான போட்டோ பிரதியை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
- உங்களுடைய வதிவை உறுதிப்படுத்துவது சம்பந்தமான பத்திரங்கள் (DS4 மாதிரிப் படிவத்தின் மூலம் வதிவை உறுதிப்படுத்தி கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
- உங்களுடைய சேவையை முடிவுறுத்தும்போது பெற்ற சம்பளத்தை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பத்திரங்கள்
- இறுதியாகப் பெற்ற சம்பளத்தைக் காட்டுகிற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள தொழில் தருநரால் சான்றுப்படுத்தப்பட்டுள்ள சம்பளச் சீட்டு
- இறுதியாகப் பெற்ற சம்பளத்தை காட்டுகின்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள தொழில் தருநரால் சான்றுப்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் ஓர் ஆவணம்.
- சம்பளச்சீட்டு இல்லாத போது முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட சம்பளத்தை பிரதிவாதி தரப்பினர் (தொழில் தருநர்) ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த ஆவணங்கள் அல்லது பிரதிவாதியின் பதில் அளிக்கும் கூற்றில் ஏற்றுக்கொண்டுள்ள சம்பளத்துடனான ஆவணத்தை முறைப்பாட்டை கோவைப்படுத்தியுள்ள நிறுவனத்தின் அதிகாரி ஒருவரால் சான்றுப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- நீங்கள் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று (முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரியொருவர் உண்மையான பிரதியென்பதை சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.)
- முறைப்பாட்டாளரான உங்களுக்காக சட்டத்தரணியொருவர் / சட்ட முகவர் ஒருவர் ஆஜராகின்றார் என்பதை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்
(சட்டத்தரணியின் / சட்ட முகவரின் பெயர் / முகவரியுடன் உங்கள் வழக்கிற்காகத் தோற்றுகின்றார் என்பதை வழக்கு இலக்கத்தை இட்டு உறுதிப்படுத்தி பெற்றுக் கொண்ட கடிதத்தை முறைப்பாட்டை கோவைப்படுத்தியுள்ள நிறுவனத்தின் அதிகாரியொருவரால், குறித்த செயலாற்றுகை அறிக்கையை அல்லது ஆஜரான திகதியுடன் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.) - உங்களுடைய முறைப்பாடு வழக்கு தொடர்ந்தும் விசாரிக்கப்படுமானால்:
எதிர்வரும் வழக்கு விசாரணை திகதியை வழக்கு இலக்கத்துடன் முறைப்பாட்டை கோவைப்படுத்தியுள்ள நிறுவனத்தின் அதிகாரியால் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும். - உங்கள் முறைப்பாடு/ வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டிருந்தால்:
இறுதி வழக்குத் தீர்ப்பின் பிரதியொன்றை உண்மையான பிரதியென முறைப்பாட்டைக் கோவைப்படுத்தியுள்ள நிறுவனத்தின் அதிகாரி ஒரவரால் சான்றுப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைச் சான்றுப்படுத்த வேண்டியவர்கள் மற்றும் சான்றுப்படுத்த வேண்டிய முறை யாது?
- வதிவையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து பத்திரங்களையும் கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலாளரும் சானறுப்படுத்த வேண்டும்.
- சம்பளத்தை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், முறைப்பாட்டின் பிரதி, சட்டத்தரணியொருவர் / சட்ட முகவர் ஒருவர் தோற்றுகிறார் எனபதற்கான சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களையும் முறைப்பாட்டைக் கோவைப்படுத்தியுள்ள நிறுவனத்தின் அதிகாரியொருவர் சான்றுப்படுத்த வேண்டும்
உங்கள் முறைப்பாடு தொடரப்பட்டிருப்பது:
- தொழில் நியாய சபையில் என்றால் - உதவி செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்
- தொழில் நீதிமன்றத்தில் என்றால் - ஆவணப பதிவாளரால சான்றுப்படுததப்பட வேண்டும்
- தொழில் நட்ட ஈட்டு அணையாளரிடம் என்றால் அல்லது - தொழில் ஆணையாளர் அல்லது உதவி தொழில் ஆணையாளர் சான்றுப்படுத்த வேண்டும்.
கவனிக்கவும்:- மேற்படி அதிகாரிகளுக்குப் பதிலாக சான்றுப்படுத்துவதாக இருந்தால் சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலரின் / தலைவரின் / பெயரையும் பதவியையும் இட்டு பதவி முத்திரையும் வைத்து சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
சட்ட உதவி கோருவதற்காக விண்ணப்பபடிவத்தை / ஆலோசனை பிரசுரத்தைப் பெற்றுக் கொள்வது எப்படி?
இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்தல் மூலம்
சிரம வாசனா நிதிய அலுவலகத்திலிருந்து (விண்ணப்பித்தால் அனுப்பி வைக்கப்படும்)
அனைத்து தொழில் அலுவலகங்களிலிருந்து
அனைத்து தொழில் நியாய சபைகளிலிருந்து
தொழில் நட்ட ஈட்டு ஆணையாளர் அலுவலகத்திலிருந்து
மரணத்தை ஏற்படுத்திய அனர்த்தங்களின்போது நிதியுதவியும் சிரம வாசனா புலமைப் பரிசிலும் வழங்குதல்
மரணத்தை ஏற்படுத்திய அனர்த்தங்களின்போது நிதியுதவியும் சிரம வாசனா புதல்வர்கள் புதல்விகள் நற்பணியின் கீழ் புலமைப்பரிசிலையும் பெற்றுக்கொள்வது எப்படி?
ஊழியர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சேவை செய்வதாக இருந்தால் அல்லது சேவையில் ஈடுபட்டிருந்தபோது அல்லது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி இறக்கும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு சிரம வாசானா நிதியத்திலிருந்து இறந்த ஊழியர்களுக்காக நிதியுதவியும் கல்வி கற்கின்ற தங்கி வாழ்கின்றவர்களுக்கு சிரம வாசனா புலமைப்பரிசுடன் பாடசாலை உபகரணங்களையும் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
மரணத்தை ஏற்படுத்தும் அனர்த்தத்தின் கீழ் இறந்த ஊழியர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் யாவை?
- இறந்த ஊழியரில் தங்கி வாழ்கின்றவர்களுக்கு நிதியுதவி
- இறந்த ஊழியரின் கல்வி கற்கின்ற தங்கி வாழ்பவர்களுக்கு 50,000/= ரூபா புலமைப் பரிசுடன் 10,000/= ரூபா பெறுமதியுள்ள பாடசாலை உபகரணத் தொகுதியொன்றும் வழங்கப்படும்.
மரண விபத்து புலமைப்பரிசின் கீழ் நிதியுதவியையும் புலமைப் பரிசையும் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
இறந்தவர் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பித்தல்
- இறந்த ஊழியரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பத்திரங்கள்
- இறந்தவரின் தேசிய அடையாள அட்டை / சாரதி உத்தரவு பத்திரம் / கடவுச்சீட்டு என்பவற்றின் தெளிவான போட்டோ பிரதியை சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- இறந்த ஊழியரின் பிறப்புச் சான்றிதழ் தெளிவான போட்டோ பிரதியை சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- இறந்த ஊழியரின் இறப்புச்சான்றிதழின் தெளிவான போட்டோ பிரதியை சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.இறந்தவரின் வதிவை சான்றுப்படுத்தும் பத்திரங்களை DS4 மாதிரி படிவத்தின்மூலம் வதிவை சான்றுப்படுத்தி கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- இறந்தவர் சேவையில் ஈடுபட்டிருக்கும்போது விபத்துக்குள்ளானார் என்பதை / ஊழியர் என்பதை சான்றுப்படுத்தும் பத்திரங்களை தொழில் தருநர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
இறந்தவரில் தங்கி வாழ்கின்றவர்கள் பற்றிய தகவல்களைச் சமர்ப்பித்தல்
கல்வி கற்கும் தங்கி வாழ்பவர்கள்:
- புலமைப்பரிசு பயனாளியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்:
- தேசிய அடையாள அட்டை / அஞ்சல் அடையாள அட்டை / பாடசாலை அடையாள அட்டையின் தெளிவான போட்டோ பிரதியை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- புலமைப்பரிசு பயனாளியின் பிறப்புச்சான்றிதழின் தெளிவான போட்டோ பிரதியை சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- தற்பொழுது கல்வி கற்கின்றதை உறுதிப்படுத்துகின்ற பத்திரங்களை கல்வி கற்கும் நிறுவனத்தின் / பாடசாலையின் அதிபர் / நிறுவன தலைவர், தொடர்ச்சியாக கல்வி கற்கிறார் என்பதை உறுதிப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
- புலமைப்பரிசு பயனாளி இறந்தவருக்குள்ள உறவை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்
புலமை பரிசு பயனாளியின் பாதுகாவலர் தொடர்பான தகவல்கள்
- பாதுகாவலரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்
- பாதுகாவலரின் வதிவை உறுதிப்படுத்தும் பத்திரங்கள்
- பாதுகாவலருக்கும் புலமைப்பரிசு பயனாளிக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் பத்திரங்கள், பாதுகாவலரின் பிறப்புசசான்றிதழின் தெளிவான போட்டோ பிரதியொன்றை அல்லது ஏனைய சட்டபூர்வமான பத்திரம்.
- சேவையிலீடுபட்டிருக்கின்ற போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் உள்ள வேலையற்ற அனைத்து தங்கி வாழ்வோர் தொடர்பான தகவல்களை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களைச் சான்றுப்படுத்த வேண்டியவர்கள் யார்? எப்படி?
- வதிவை / அடையாளத்தை / உறவு தொடர்பை உறுதிப்படுத்துகிற அனைத்து ஆவணங்களையும் (DS4 / அடையாள அட்டை / பிறப்புச் சான்றிதழ் / இறப்புச் சான்றிதழ் / விவாக சான்றிதழ் போன்றவை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் சான்றுப்படுத்த வேண்டும்.
- புலமைப்பரிசு பயனாளி கல்வி கற்பதை சான்றுப்படுத்த வேண்டியவர் அவர் கல்வி கற்கின்ற பாடசாலையின் நிறுவனத்தின் அதிபர் அல்லது நிறுவனத் தலைவர்.
- இறந்தவர் சேவையிலீடுபட்டிருக்கின்ற போது இறந்துள்ளார் என்பதை அல்லது ஊழியர் என்பதை தொழில் தருநர் அல்லது பிராந்தியத்தின் தொழில் ஆணையாளர் சான்றுப்படுத்த வேண்டும்.